உடைந்து போன எலும்புகளில்,
நொருங்கி போன கனவுகள்...
உறைந்து நின்ற குருதியில்,
தேங்கி கிடந்த ஆசைகள்...
இமைக்க மறுத்த விழிகளில்,
பார்க்க துடித்த காட்சிகள்...
கேட்க அடைத்த செவிகளில்,
கதறி அழுத ஓலங்கள்...
நீ பிரிந்து சென்ற கூட்டிற்கு,
வருந்தி சென்ற நான்....
- உன் நண்பன்