Through My Eyes
Search This Blog
Saturday, February 8, 2014
உனையின்றி வேறில்லை
நிற்காமல் பறந்து கொண்டிருந்தேன் உன்னுடன்...
கால்கள் தரையில் படாமல்,
காற்றை கிழித்துக்கொண்டு,
வேகமாய் ...
கவலையின்றி ...
பயமின்றி ...
உறைந்து போன நேரத்தில்,
விரைந்து சென்ற பருவம் விட்டு,
வரவிருக்கும் காலம் நோக்கி ...
முதுவேனில் மழை
காலையில் பார்த்த வானே !!!
நண்பகல் எரித்த தென்று,
கார்மேகம் போர்த்தி வைத்தாய்...
என்னுடன் கைகள் கோர்க்க,
சாரலும் தூர வைத்தாய்...
குட்டையில் அலை எழுப்பி,
கவலைகள் கலைத்து வைத்தாய்...
'சோ'என கனமழை கொட்டி,
அருகினில் நெருங்க வைத்தாய்...
மின்னல்கள் உடைத்து வைத்து,
மார்பினில் சாய வைத்தாய்...
முதுவேனில் மாலைப் பொழுதில் !!!
மஞ்சள் பிம்பம்
அழகிய சூரியனை தினமும் செதுக்கிய பின்,
கொல்லன் விட்டுச் செல்லும் தங்கத் துகள்கள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)